search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேடம் டுசாட்ஸ்"

    • டெல்லியில் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் ஜூன் 2018-ல் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு மெழுகு சிலை நிறுவப்பட்டது.
    • கிரிக்கெட் வீரரின் ரசிகர்கள் அந்த பெண்ணை அவதூறாக பேசி வருகின்றனர்.

    விளையாட்டு, பொது சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனைகள் புரியும் பிரபலங்களுக்கு மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்படுகிறது. அவ்வகையில், ஜூன் 2018-ல் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை நிறுவப்பட்டது.

    இந்நிலையில் டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோலியின் சிலைக்கு பெண் ஒருவர் முத்தமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மெழுகு சிலைக்கு பெண் ஒருவர் முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ இணையத்தின் கவனத்தை ஈர்த்தது.


    ஆனால் கிரிக்கெட் வீரரின் ரசிகர்கள், அந்த பெண்ணை சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி வருகின்றனர். அனுஷ்கா ஷர்மாவின் எதிர்வினை குறித்து சிலர் கவலைப்பட்டதாகவும் தெரிகிறது.

    அவர் கிரிக்கெட் வீரரின் ரசிகை என தெரிகிறது. அவள் மெழுகு சிலையுடன் போஸ் கொடுத்தபடி சிரித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.

    கையில் துடைப்பத்துடன் மகாத்மா காந்திக்கு மெழுகு சிலை வைக்க வேண்டும் என மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்துக்கு பிரதமர் மோடி பரிந்துரை செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #CleanIndia #PMModi #MadameTussauds
    புதுடெல்லி:

    உலகப்புகழ் பெற்ற பிரபலங்களின் மெழுகு சிலைகள் லண்டன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியிலும் இதேபோன்ற அருங்காட்சியகம் கடந்தாண்டு இறுதியில் திறக்கப்பட்டது. இங்கு, மகாத்மா காந்தி, பகத்சிங், நேதாஜி, அப்துல்கலாம் உள்ளிட்ட பல தலைவர்களுக்கு மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி, அமிதாப் பச்சன், டாம் குரூஸ், சல்மான் கான், சச்சின், கோலி உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு இங்கு மெழுகு சிலை உள்ளது. இந்நிலையில், இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் முன்னர் அதன் நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி கூறிய பரிந்துரை ஒன்றை அருங்காட்சியக நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.

    தூய்மை இந்தியா திட்டத்தை பிரதிபலிக்கும் வண்ணம், 1.25 பில்லியன் மக்களை தூய்மை குறித்து ஊக்குவிக்கும் வண்ணம் மகாத்மா காந்தியின் கையில் துடைப்பத்துடன் இருக்கும் படி மெழுகு சிலை வைக்க வேண்டும் என மோடி, அருங்காட்சிய நிர்வாகிகளை கேட்டுள்ளார்.

    மேலும், காந்தி கையில் துடைப்பம் வைத்திருக்கும் படியான புகைப்படத்தை தான் அனுப்புவதாகவும் அவர் கூறியுள்ளார். 

    எனினும், மகாத்மா காந்தி கையில் நீண்ட குச்சி வைத்திருக்கும் படியான மெழுகு சிலையே வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
    ×